×

விஜய் மல்லையா மும்பை சிறையில் அடைக்கப்பட்டாரா? – சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி

வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் விஜய் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் மல்லையாவின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அவர் இந்தியாவுக்கு
 

வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.


பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் விஜய் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் மல்லையாவின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார், மும்பையில் உள்ள ஆர்தர் காட்டன் சிறையில் அடைக்கப்பட்டார் என்று எல்லாம் பல தகவல்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில், விஜய் மல்லையா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். ஆனால், அதற்கு முன்பு இன்னும் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவற்றை கலைவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விஜய் மல்லையாவுக்கான அனைத்து சட்ட உதவிகளும் முடிந்துவிட்டன. விஜய் மல்லையா எப்போது இந்தியாவுக்கு அழைத்து வருவார் என்று இப்போது கூற முடியாது. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதும் கணிக்க முடியாது. முடிந்த வரையில் விரைவாக அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.