×

அறைக்குள் இருந்த காதலர்கள் -ஆத்திரத்தில் நுழைந்த தந்தை -அடுத்து பூட்டிய வீட்டில் நடந்த பயங்கரம்

மகளையும் அவரின் காதலனையும் ஒரு தந்தை வீட்டினுள் பூட்டி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது . உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் ஒரு டீனேஜ் பெண்ணும் அவரின் வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு டீனேஜ் பையனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .அந்த பெண்ணின் தந்தை ஒரு ட்ரக் ட்ரைவராக வேலை பார்க்கிறார் .இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதர்கள் அனைவரும் பண்டாவில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டனர் .அப்போது
 


மகளையும் அவரின் காதலனையும் ஒரு தந்தை வீட்டினுள் பூட்டி விட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது .


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் ஒரு டீனேஜ் பெண்ணும் அவரின் வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு டீனேஜ் பையனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் .அந்த பெண்ணின் தந்தை ஒரு ட்ரக் ட்ரைவராக வேலை பார்க்கிறார் .இந்நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை அந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதர்கள் அனைவரும் பண்டாவில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டனர் .
அப்போது அதை தெரிந்து கொண்ட அந்த பெண்ணின் காதலர் அந்த தனியாக வீட்டிலிருக்கும் காதலியை தேடி அவரின் வீட்டிற்க்குள் நுழுந்தார் .அதன்பிறகு அந்த பெண்ணோடு அந்த வீட்டிலுள்ள ஒரு அறையில் ஜாலியாக அவர்கள் இறந்தனர் .அந்த காதலன் வீட்டிற்குள் போனதை அந்த காதலியின் உறவினர் ஒருவர் பார்த்து விட்டார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து இதை கூறினார் .அதை கேட்டு கோபமாக வீட்டிற்கு வந்த அந்த தந்தை ஒரு அருவாள் எடுத்துக்கொண்டு ,அந்த வீட்டினுள் சென்று அவரின் மகள் மற்றும் அவரின் காதலன் இருவரையும் வெட்டி கொலை செய்தார் .பின்னர் அந்த காதலனின் தந்தை இதை கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்து மகனின் பிரேதத்தினை பார்த்து அழுதார் .அதன் பிறகு அவர் போலீசில் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த காதலியின் தந்தையை கொலை வழக்கில் கைது செய்தனர் .