×

“என் மகனுக்கு பொண்டாட்டியா இரு ,எனக்கு வைப்பாட்டியா இரு” -மருமகளை கெடுத்த மாமனார்…

ஒரு குடும்பத்தில் மகனுக்கு இரண்டாவது மனைவியாக வந்த மருமகளை ஒரு மாமனார் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது . உ.பி. மாநிலம் நொய்டாவில் ஒரு ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு பூர்வன்சால் ஹைட்ஸ் சொசைட்டியில் மாமனாருடன் வசித்து வருகிறது.இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் அப்பெண்ணின் மாமனார் ஒரு நாள் அவரின் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார் .ஆனால் அந்த மருமகள் மாமனாரிடம் நீங்கள் இப்படி செய்தால் தான் தனது
 

ஒரு குடும்பத்தில் மகனுக்கு இரண்டாவது மனைவியாக வந்த மருமகளை ஒரு மாமனார் பலாத்காரம் செய்த கொடுமை அரங்கேறியுள்ளது .
உ.பி. மாநிலம் நொய்டாவில் ஒரு ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு பூர்வன்சால் ஹைட்ஸ் சொசைட்டியில் மாமனாருடன் வசித்து வருகிறது.இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில்

அப்பெண்ணின் மாமனார் ஒரு நாள் அவரின் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தார் .ஆனால் அந்த மருமகள் மாமனாரிடம் நீங்கள் இப்படி செய்தால் தான் தனது கணவரிடம் சொல்லிவிடுவதாக கூறினார் .
அதற்கு அவர் தான் சொன்னதை கண்டுகொள்ளாமல் மீண்டும் தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அந்த மருமகள் குற்றம் சாட்டினார். இதை தனது கணவரிடம் சொன்னபோது அதை அவர் நம்பாமல் தன்னை அவரின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாக அவர் கூறினார் .பிறகு இன்னொரு நாள் அந்த மாமனார் மீண்டும் அவரை பலாத்காரம் செய்ய முயன்றார் ,இதனால் அப்பெண் அதிர்ச்சியுற்றார்

அதன் பின்னர் அவர் தனது பெற்றோருடன் செக்டர் பீட்டா 2 இல் வசித்து வருவதாகவும் அந்த பெண் கூறினார் .பின்னர் தனது பெற்றோருடன் அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரின் மாமனார் மீது பாலியல் புகார் பதிவு செய்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரித்ததில் அப்பெண் அவரின் கணவருக்கு இரண்டாம் தாரம் என தெரிய வந்தது .பிறகு மாமனார் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .