×

ரயில் படிக்கட்டில் செல்போன் பேசியபடி பயணம் : ஆற்றில் தவறி விழுந்த இளம்பெண்!

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரிலிருந்து ஷிமோகாவிற்கு தனது தாயாருடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார் சஹானா. இவர் ரயில் பயணத்தின் போது காற்று வாங்கிக்கொண்டே ரயில் படிக்கட்டில் நின்றவாறு செல்போனில் நண்பருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயிலானது ஷிமோகா நகரின் துங்கா நதி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சஹானா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் ஆற்றில் அடித்து
 

ரயில் படிக்கட்டில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் கால் தவறி ஆற்றில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரிலிருந்து ஷிமோகாவிற்கு தனது தாயாருடன் ரயிலில் சென்று கொண்டிருந்தார் சஹானா. இவர் ரயில் பயணத்தின் போது காற்று வாங்கிக்கொண்டே ரயில் படிக்கட்டில் நின்றவாறு செல்போனில் நண்பருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ரயிலானது ஷிமோகா நகரின் துங்கா நதி பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சஹானா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் ஆற்றில் அடித்து செல்லபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் விழுந்த அப்பெண்ணை தேடி வருகிறார்கள். ஒருபுறம் மனைவி, மகள் வருகைக்காக அப்பெண்ணிந தந்தை ரயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்துள்ளார். பின்னர் தகவல் கிடைத்த அவர் கதறி அழுதுள்ளார். இளம்பெண் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.