×

தேர்தலில் கவனத்தை ஈர்த்த ‘திருநங்கை அனன்யா’ மர்ம மரணம்; அதிரவைக்கும் சம்பவம்!

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக போட்டியிட 28 வயதான திருநங்கை அனன்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எனினும் கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகள்
 

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக போட்டியிட 28 வயதான திருநங்கை அனன்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திருநங்கை ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எனினும் கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகள் எழுந்ததால் வேட்புமனுவை அனன்யா வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், கொச்சியில் உள்ள வீட்டில் திருநங்கை அனன்யா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெகுநேரமாகியும் அனன்யா யாரையும் தொடர்பு கொள்ளாததால் பதற்றம் அடைந்த அவரது நண்பர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்க்கையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அனன்யா எல்.ஜி.பி.டி பிரிவினர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர். அதுமட்டுமல்லாமல் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து போது சபரிமலைக்கு சென்று வெற்றிகரமாக சாமி தரிசனம் செய்து முடித்து திரும்பி கவனத்தை ஈர்த்தவர். இவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட அனன்யா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அனன்யா வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அனன்யாவின் நண்பர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.