×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்! நாளை முதல் டிக்கெட் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறவிருக்கிறது. இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களை பிரமோற்சவத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில், திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்துக்கு பக்தர்கள் வர அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. பக்தர்களுக்கான ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை முதம் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள்
 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறவிருக்கிறது. இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பக்தர்களை பிரமோற்சவத்துக்கு அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்துக்கு பக்தர்கள் வர அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. பக்தர்களுக்கான ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை முதம் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் டிக்கெட்களை tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதியின் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் பிரமோற்சவம் நடைபெறவிருப்பதாகவும் ஆன்லைனில் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.