×

கொரோனா இருப்பது தெரியாமல் திருமணத்தில் ஆட்டம் பாட்டம் : திடீரென மயங்கி விழுந்த மணமகன்!

ஆந்திராவின் பத்திகொண்டா மண்டலம், மர்ரிமானதாண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிசெய்து வருகிறார். இவருக்கும் வேல்தூர்த்தி மண்டலம், எல்.தாண்டாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் மணமகன் ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு கடந்த 10 ஆம் தேதி வந்தார். இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்ததுடன் அன்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மணமகன் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை
 

ஆந்திராவின் பத்திகொண்டா மண்டலம், மர்ரிமானதாண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிசெய்து வருகிறார். இவருக்கும் வேல்தூர்த்தி மண்டலம், எல்.தாண்டாவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் மணமகன் ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு கடந்த 10 ஆம் தேதி வந்தார்.

இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்ததுடன் அன்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது மணமகன் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மணமகனுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதை தொடர்ந்து அவரை கர்னூல் கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புதுப்பெண் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா இருப்பது தெரியாமலே 50ற்கும் மேற்பட்ட உறவினர்கள், ஊர் கிராம மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த அந்த கிராமமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. மேலும் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.