×

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விளையாடும்போது இறந்ததாக நாடகம்!

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இடுக்கி வண்டிப்பெரியாறு பகுதியைச் சேர்ந்த அந்த 5 வயது பெண் குழந்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வாழைத்தார் கட்டும் கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாகக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவரவே, விசாரணையில் இறங்கிய போலீசார், குழந்தையின் குடும்ப நண்பனாகப் பழகி வந்த அர்ஜுனன்
 

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இடுக்கி வண்டிப்பெரியாறு பகுதியைச் சேர்ந்த அந்த 5 வயது பெண் குழந்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வாழைத்தார் கட்டும் கயிற்றில் கழுத்து இறுக்கி இறந்ததாகக் கூறப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவரவே, விசாரணையில் இறங்கிய போலீசார், குழந்தையின் குடும்ப நண்பனாகப் பழகி வந்த அர்ஜுனன் என்பவனை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்தபோது இறந்த குழந்தையை கயிற்றில் மாட்டி தொங்கவிட்டுவிட்டு, இறுதிச் சடங்கில் ஒன்றும் தெரியாதவன் போல் அர்ஜுனன் கலந்துகொண்டதும் தெரியவந்தது.