×

தாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் -சுஷாந்த் சிங் ரூமையே சுற்றி வரும் அவரின் நாய்-ஷூட்டிங் போயிருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறதாம் ..

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புத் வளர்த்து வந்த அவரின் செல்ல நாய் கருப்பு லாப்ரடரான ஃபட்ஜ் இன்னும் தனது எஜமானருக்காக காத்திருக்கிறார். சுஷாந்த் செல்லமாக அந்த நாயை வளர்த்து வந்தார் ,அவர் ஷூட்டிங் போன சமயம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் அது அவரோடுதான் இருக்கும் .அந்த நாயும் அவர் மீது தாய்ப்பாசத்தை மிஞ்சுமளவுக்கு நேசத்தோடு இருக்கும் . இப்போது
 

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புத் வளர்த்து வந்த அவரின் செல்ல நாய் கருப்பு லாப்ரடரான ஃபட்ஜ் இன்னும் தனது எஜமானருக்காக காத்திருக்கிறார். சுஷாந்த் செல்லமாக அந்த நாயை வளர்த்து வந்தார் ,அவர் ஷூட்டிங் போன சமயம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் அது அவரோடுதான் இருக்கும் .அந்த நாயும் அவர் மீது தாய்ப்பாசத்தை மிஞ்சுமளவுக்கு நேசத்தோடு இருக்கும் .


இப்போது சுஷாந்த் உயிரோடு இல்லாத நிலையில் அவரின் செல்லம் ஃபட்ஜ் என்ன செய்கிறது என தெரிந்து கொள்ள அனைவரும் ஆசைப்பட்டனர் ,அதனால் அவரின் உறவுப்பெண் மல்லிகா தனது சமூக ஊடகத்தில் சுஷாந்தின் செல்ல நாய் ஃபட்ஜ் அவர் ஷூட்டிங் போயிருப்பதாக நினைத்து கொண்டு ,தன் எஜமானர் அவுட்டோர் ஷூட்டிங் முடிந்து சீக்கிரம் வீடு திரும்பி விடுவார் என்று அவரின் அறையை சுத்தி சுத்தி வருகிறது என்றார் .மேலும் ஒவ்வொரு முறை அவரின் அறைக்கதவு திறக்கப்படும்போதும் தன்னுடைய எஜமான் சுஷாந்த் வந்துவிட மாட்டாரா தன்னை கொஞ்ச மாட்டாரா என்று ஏக்கத்தோடு பார்ப்பதாக கூறியுள்ளார் .இப்போது சுஷாந்த் உயிரோடில்லாத நிலையில் அவர் வளர்த்த ஃபட்ஜ் நாயை தான் செல்லமாக வளர்த்து வருவதாக அவர் கூறியுள்ளார் .