×

மனைவியுடன் இருந்த காதலனின் காது, மூக்கை அறுத்து.. கணவன் செயலால் பதைபதைப்பில் இளம்பெண்

மனைவியுடன் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞரின் காது மற்றும் மூக்கினை வெட்டி வீசிவிட்டு ஓடவிட்ட கணவனின் செயல் அதிர வைக்கிறது. தன்னுடன் இருந்த காதலனுக்கே இந்த கதி என்றால் தனக்கு என்னாவாகுமோ என்ற பதைபதைப்பில் இருக்கிறாராம் இளம்பெண். பாகிஸ்தான் லாகூரில் இருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. முஸ்பர்கர் கிராமத்தில் அப்துல் கையும் என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது
 

மனைவியுடன் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த இளைஞரின் காது மற்றும் மூக்கினை வெட்டி வீசிவிட்டு ஓடவிட்ட கணவனின் செயல் அதிர வைக்கிறது. தன்னுடன் இருந்த காதலனுக்கே இந்த கதி என்றால் தனக்கு என்னாவாகுமோ என்ற பதைபதைப்பில் இருக்கிறாராம் இளம்பெண். பாகிஸ்தான் லாகூரில் இருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முஸ்பர்கர் கிராமத்தில் அப்துல் கையும் என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் என்ற இளைஞருக்கும் அப்துல் கையும் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் கள்ள உறவில் இருக்கும் விஷயம் அப்பகுதியினருக்கு தெரிய வந்துள்ளது.

அவர்கள் அப்துல் கையூம் இடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். அப்துல் கையூம் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி கண்டித்து பார்த்திருக்கிறார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து கள்ள உறவில் தொடர்வதை அக்கம்பக்கத்தினர் சொல்லி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வியாழனன்று முஹம்மது அக்ரம் தனியாக சென்று கொண்டிருந்த சமயம் பார்த்து, நண்பர்களுடன் சென்று அவரை சுற்றி வளைத்து இருக்கிறார் அப்துல் கையும். தான் கொலை செய்யப்பட போகிறோம் என்று நினைத்த முகம்மதுஅக்ரம் தப்பிக்க நினைத்து இருக்கிறார் . ஆனால் நண்பர்கள் முகமது அக்ரமை பிடித்துக்கொள்ள , முகமது அக்ரமின் காது மற்றும் மூக்கை கத்தியால் வெட்டி இருக்கிறார் அப்துல் கலாம்.

இதில் முகம்மது அக்கரம் அவர் வலியால் துடிதுடித்திருக்கிறார். அவரை விட்டுவிட்டு அப்துல் கையும் மற்றும் அவரது நண்பர்கள் ஓடிவிட்டனர். வலியால் துடிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கையூம்-ஐ போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலனின் காது மற்றும் மூக்கை வெட்டி வீசிய கணவனின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறார் மனைவி. காதலனுக்கு இந்த நிலைமை என்றால் தனது கதி என்னவாகும் என்ற பதைபதைப்பில் இருக்கும் இளம்பெண், போலீசாரிடம் தனது அச்சத்தை தெரிவித்துள்ளாராம்.