×

தெலங்கானா உள்துறை அமைச்சருக்கும் கொரோனா பாசிடிவ்

தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் முகமது அலி. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே முகமது அலியின் பாதுகாவலர் மற்றும் அலுவலக ஊழியர் உள்ளிட்ட
 

தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் முகமது அலி. உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே முகமது அலியின் பாதுகாவலர் மற்றும் அலுவலக ஊழியர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதியானது. தற்போது அமைச்சருக்கும் உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர், மாநில போலீஸ் அதிகாரிகள், உள்துறை செயலாளர் என பலருடன் தொடர்பில் இருப்பவர் உள்துறை அமைச்சர். தினமும் ஏராளமான ஆலோசனை கூட்டங்களில் இவர் பங்கேற்று வந்துள்ளார். இவர் மூலமாக வேறு யாருக்கு எல்லாம் பரவியது என்ற அச்சம் அங்கு ஏற்பட்டுள்ளது. உள்துறை அமைச்சருடன் தொடர்பிலிருந்த அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.