×

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன அந்த வீரர் சாகிர் மன்சூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளனர். Rifleman Shakir Manzoor of 162 Battalion (TA), is missing since 1700hrs yesterday. His abandoned burnt car has
 

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன அந்த வீரர் சாகிர் மன்சூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சாகிர் மன்சூரின் கார் எரிந்த நிலையில்  குல்கம் மாவட்டத்தின் ரம்பா பகுதியின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.  எனவே அவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.  ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு ராணுவம் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

 

இதேபோல் 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் வீட்டிற்கு சோபியான் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற ராணுவ வீரர் உமர்  பயாஸ் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.