×

புதுச்சேரியில் கொரோனாவுக்கு எஸ்.ஐ. பலி!

கொரோனாவுக்கு புதுச்சேரியில் எஸ்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் . கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் குறைந்த பாடில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளனர்.இதனிடையே புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால்
 

கொரோனாவுக்கு புதுச்சேரியில் எஸ்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளராக மோட்டார் வாகன பிரிவில் பணியாற்றிய சரவணன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் . கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகம் குறைந்த பாடில்லை. இருப்பினும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளனர்.இதனிடையே புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,161 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .