ம.பி, ராஜஸ்தான் நிகழ்வுக்கு ராகுல் காந்திதான் பொறுப்பு! – உமா பாரதி பேச்சு
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பறிபோனதற்கும், ராஜஸ்தானில் பறிபோக உள்ளதற்கும் ராகுல்காந்திதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ராஜஸ்தானில் தற்போது நடந்து வருவதற்கும் மத்திய பிரதேசத்தில் நடந்ததற்கும் ராகுல் காந்திதான் பொறுப்பு. அவர் இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் வளர்வதை அனுமதிக்கவில்லை. இளம், திறமை மிக்க, நன்கு படித்த சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா போன்றவர்கள் உயர் பதவிக்கு வந்தால் தான் பாதிக்கப்படுவோம் என்று கருதி அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்” என்றார்.