“மின்சாரம் பாய்ச்சி கொன்ற சம்சாரம்”- கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவனுக்கு “ஷாக்” கொடுத்த மனைவி..
ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தில் சவுக்கானில் உள்ள தீன்கர் பகுதியில் ஒரு கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள் . இவர்களின் வாழ்வில் கருநாக பாம்பாக புகுந்தான் கள்ளக்காதலன்.ஆம் ,அந்த மனைவிக்கு உள்ளூரில் உள்ள ஒருவரோடு கள்ளகாதல் பிறந்தது .இருவரும் கணவனுக்கு தெரியாமல் ஒன்றாக சுற்றி வந்தார்கள் .ஒருநாள் இருவரும் கணவன் வெளியே போயிருந்த நேரத்தில், ஒன்றாக இருந்த போது ,திடீரென வீட்டுக்குள் வந்த கணவனுக்கு அந்த காட்சியை கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது . அதிர்ச்சியில் உறைந்த கணவன் இது பற்றி மனைவியிடம் கேட்டு அந்த உறவை கைவிடுமாறு பலமுறை கேட்டுக்கொண்டார் .அப்போதெல்லாம் கைவிடுகிறேன் என்று கூறிய மனைவி கணவனுக்கு தெரியாமல் கள்ள உறவை தொடர்ந்து வந்துள்ளார் .மீண்டும் கணவனுக்கு சந்தேகம் வந்து குடும்பத்தில் சண்டை வந்தது .
இதனால் கடுப்பான மனைவி ,கள்ளகாதலன் கொடுத்த யோசனைப்படி ,ஒரு நாள் கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு ,அவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிட்டார் .
கணவன் இறந்ததும் ,மறுநாள் காலையில் கணவரின் குடும்பத்திற்கு போன் செய்து தன்னுடைய கணவர் மயக்கமுற்று திடீரெனெ இறந்துவிட்டதாக கூறியுள்ளார் .அதை நம்பிய கணவன் வீட்டார் அவரை அடக்கம் செய்து விட்டு போய் விட்டார்கள் .
அதற்கு பிறகு 12 நாள் கழித்து இறந்தவரின் சகோதரருக்கு அவரின் சாவில் சந்தேகம் வந்து அவரின் மனைவியிடம் கேட்டபோது, அவர் தான் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த உண்மையை சொல்லிவிட்டார் .இதனால் கடுப்பான அவர்கள் அவர் மனைவி மீது போலீசில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறர்கள் .