ஊரடங்கு காலத்தில் சம்பளம் குறைப்பா?… உரிமையாளர், ஊழியர் பேச்சு வார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது குறித்து முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காலத்தில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வாய்ப்பு உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் வேலை செய்யாதவர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்யக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், பல நிறுவனங்கள் ஊதியத்தைக் குறைத்த, பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின.