×

“ஆஷ்ரமத்திற்குள் நடந்த அநியாயம்” -பஜனை செய்த பெண் சாமியாருக்கு நேர்ந்த கொடுமை .

ஒரு ஆஷ்ரமத்திற்குள் புகுந்து அங்கு பூஜைகள் செய்துகொண்டிருந்த சாமியார்களை அடித்து காயப்படுத்தி அறைக்குள் பூட்டி விட்டு, அங்கிருந்த பெண் சாமியாரை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது . ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஷ்ரமத்தில் பல ஆண் சாமியார்களும் ,பெண் சாமியார்களும் இருந்தனர் .அவர்கள் தினமும் கடவுளை நினைத்து பூஜைகள் செய்தும் ,பஜனைகள் செய்தும் அன்றாட பொழுதை கழித்து வந்தனர்.இந்நிலையில் அங்கு இளம் வயது
 

ஒரு ஆஷ்ரமத்திற்குள் புகுந்து அங்கு பூஜைகள் செய்துகொண்டிருந்த சாமியார்களை அடித்து காயப்படுத்தி அறைக்குள் பூட்டி விட்டு, அங்கிருந்த பெண் சாமியாரை நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஷ்ரமத்தில் பல ஆண் சாமியார்களும் ,பெண் சாமியார்களும் இருந்தனர் .அவர்கள் தினமும் கடவுளை நினைத்து பூஜைகள் செய்தும் ,பஜனைகள் செய்தும் அன்றாட பொழுதை கழித்து வந்தனர்.இந்நிலையில் அங்கு இளம் வயது பெண் சாமியார்கள் இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் நோட்டமிட்டனர்.இதனால் அவர்கள் அந்த இளம் வயது பெண் சாமியாரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளனர் .
இதனால் நான்கு பேர் திங்கள்கிழமை இரவு பாத்வாரா கிராமத்தில் உள்ள இந்த ஆஷ்ரமத்திற்குள் கதவை உடைத்து விட்டு நுழைந்தனர் .அப்போது அங்கு பஜனையில் ஈடுபட்டிருந்த , பல ‘சாதுக்களை’ ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு , அங்கிருந்த 38 வயது பெண் சாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு அங்கு இதை எதிர்த்த ஒரு சாதுவை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள் .அதன் பிறகு அந்த நால்வரும் அங்கிருந்த தப்பி சென்று விட்டார்கள் .
இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சாது அங்குள்ள காவல் நிலையத்தில் நால்வர் மீது புகார் கொடுத்தார் .போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் தீபக் ராணா என்ற குற்றவாளி உள்பட மூன்று பேரை கைது செய்தனர் .மற்றொருவரை தீவிரமாக தேடி வருகிறர்கள்