×

காவலாளியை இரும்புக் குழாயால் தாக்கிய மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு!

புதுச்சேரி அருகே தனியார் துணிக்கடை காவலாளி மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருபவர் முத்துக் குமாரசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, கடையின் வாசலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் கடையின் அருகே வந்த மர்ம நபர்கள், அவரை இரும்புக் குழாயால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றதால் மீண்டும் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்த
 

புதுச்சேரி அருகே தனியார் துணிக்கடை காவலாளி மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருபவர் முத்துக் குமாரசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, கடையின் வாசலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் கடையின் அருகே வந்த மர்ம நபர்கள், அவரை இரும்புக் குழாயால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றதால் மீண்டும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த முத்துக் குமாரசாமியை மீட்டு, பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துக் குமாரசாமி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அவரை தாக்கிய மர்ம நபர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.