19 ஆவது திருமண நாள் கொண்டாடிய ஆர்.கே.செல்வமணி – ரோஜா தம்பதியினரை வாழ்த்திய ஜெகன் மோகன் ரெட்டி!
திரைப்பட இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி நகரி சட்டமன்ற உறுப்பினரும் ஆர்.கே.செல்வமணியின் மனைவியுமான ரோஜா செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாளை முன்னிட்டு அவர்களை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். முதல்வரை சந்திக்க அவர்களின் மகன் மற்றும் மகள் இருவரும் சென்றனர். திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி
Aug 21, 2020, 21:39 IST
திரைப்பட இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி நகரி சட்டமன்ற உறுப்பினரும் ஆர்.கே.செல்வமணியின் மனைவியுமான ரோஜா செல்வமணி தம்பதியினரின் 19 வது திருமண நாளை முன்னிட்டு அவர்களை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். முதல்வரை சந்திக்க அவர்களின் மகன் மற்றும் மகள் இருவரும் சென்றனர்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக ரோஜா இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.