×

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை ரியா சக்கரவர்த்திக்கு ஜாமீன்!

நடிகை ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. பாலிவுட் நடிகை சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி போலீசாரிடம் சிக்கினார். சுஷாந்த்க்கு ரியா, போதைப்பொருள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதால் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதிகள் ரியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் ரியா மட்டும் அல்லாது அவரது சகோதரர் ஷோவிக்கும்
 

நடிகை ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

பாலிவுட் நடிகை சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி போலீசாரிடம் சிக்கினார். சுஷாந்த்க்கு ரியா, போதைப்பொருள் வாங்கிக் கொடுத்தது அம்பலமானதால் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதிகள் ரியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் வழக்கில் ரியா மட்டும் அல்லாது அவரது சகோதரர் ஷோவிக்கும் சிக்கினார். அவர்கள் இரண்டு பேரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்தில் ரியாவும் ஷோவிக்கும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில், இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகை ரியாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் ஷோவிக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். சுஷாந்த்தின் காதலி ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக்கிற்கு அக்.6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டதால் அவர்கள் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.