×

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட்டும், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட்டும், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்துவருதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளதால் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தொய்வுஏற்பட வாய்ப்புள்ளது.