×

போதையால் பாதை மாறிய தந்தை பதினோரு வயது மகளை செஞ்ச வேலைய பாருங்க ..!

இப்போது இந்த ஊரடங்கு நேரத்தில் நடக்கும் குற்றங்கள் பலரை ஆச்சர்யப்படுத்துவதோடல்லாமல் ,அதிர்ச்சியடையவும் செய்கிறது .நாட்டில் பலாத்கார வழக்குகள் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது .அதுவும் செல்போனில் ஆபாச படங்கள் வர தொடங்கியதும் ,சிறுவர் முதல் பெரியவர் வரை பாலியல் குற்றங்களை செய்கிறார்கள் .அப்படி நடந்த ஒரு விசித்திரமான தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் பலாத்கார வழக்கை பற்றி இப்போது பார்ப்போம் . மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசிக்கும் ட்ராவல்ஸ் நடத்தும் 34 வயதான
 

இப்போது இந்த ஊரடங்கு நேரத்தில் நடக்கும் குற்றங்கள் பலரை ஆச்சர்யப்படுத்துவதோடல்லாமல் ,அதிர்ச்சியடையவும் செய்கிறது .நாட்டில் பலாத்கார வழக்குகள் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது .அதுவும் செல்போனில் ஆபாச படங்கள் வர தொடங்கியதும் ,சிறுவர் முதல் பெரியவர் வரை பாலியல் குற்றங்களை செய்கிறார்கள் .அப்படி நடந்த ஒரு விசித்திரமான தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் பலாத்கார வழக்கை பற்றி இப்போது பார்ப்போம் .

மகாராஷ்டிராவின் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் வசிக்கும் ட்ராவல்ஸ் நடத்தும் 34 வயதான நபர் ,அந்த பகுதியில் இருப்போருக்கு கார் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வந்தார் .அந்த நபருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது .இதனால் எந்நேரமும் போதையில்தான் அவர் இருப்பாராம் .

அப்படி போதையில் இருக்கும்போது அவரின் 11 வயது மகளை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதுபோல இரண்டு முறை அவர் பலாத்காரம் செய்துள்ளாராம் .இது பற்றி அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியதும் ,அவர் கோபமுற்று அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது பலாத்கார புகாரளித்தார் .
புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் அவர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ,அவரை கைது செய்து சிறையிலடைத்தனர் .