×

குணமடைந்த ரங்கசாமி… தேங்காய், பூசணிக்காய் உடைத்து தொண்டர்கள் வரவேற்பு!

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர். புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடி முதல்வராக பதவியேற்றார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பதவியேற்ற பிறகும் அவரது உடல்நிலை சீராக இல்லாததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.
 

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய புதுவை முதல்வர் ரங்கசாமியை தொண்டர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து வரவேற்றனர்.

புதுச்சேரியில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடி முதல்வராக பதவியேற்றார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பதவியேற்ற பிறகும் அவரது உடல்நிலை சீராக இல்லாததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு வார சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட ரங்கசாமி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், லாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

பின்னர், நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அவரை என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் தேங்காய் உடைத்தும் பூசணிக்காய் உடைத்தும் வரவேற்றனர். தற்போது அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ரங்கசாமிக்கு கொரோனா உறுதியானதால் புதிய அமைச்சர்கள் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் எம்எல்ஏக்களும் இன்னும் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.