×

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வருகிறார். ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹத்ராஸ் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற ராகுல்காந்தி போலீசாரால் தாக்கப்பட்டார். பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். ராகுல் காந்தி தாக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் தலைவர்களும் , காங்கிரஸ் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

ராகுல்காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹத்ராஸ் வன்கொடுமையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற ராகுல்காந்தி போலீசாரால் தாக்கப்பட்டார். பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

ராகுல் காந்தி தாக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் தலைவர்களும் , காங்கிரஸ் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார். இதனிடையே தமிழகத்தில் ராகுல் காந்தி தாக்கப்பட்டதற்கு கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.