×

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா அலையில் இரண்டாம் பரவல் தீவிரமாக பரவிவருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொற்று பாதித்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர் மற்றும் வயது வித்தியாசமின்றி கொரோனா பரவலானது தீவிரமாக பரவிவருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தாலும், உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது.
 

இந்தியாவில் கொரோனா அலையில் இரண்டாம் பரவல் தீவிரமாக பரவிவருகிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொற்று பாதித்துவருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர் மற்றும் வயது வித்தியாசமின்றி கொரோனா பரவலானது தீவிரமாக பரவிவருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தாலும், உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த 3 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.