×

“துபாயில் வேலை என்று இளம் பெண்களுக்கு வலை”-வெளிநாட்டில் விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர் -தாய் நாட்டுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர்

பசவராஜ் கலசாட் என்ற 37 வயது நபர் சென்னையிலும் ,டெல்லியிலும் ‘மெட்ராஸ் காஸ்டிங் இன்டர்நேஷனல் மாடலிங் ஈவென்ட்ஸ்”என்ற பெயரில் ஒரு கம்பெனி நடத்துகிறார் .இந்த கம்பெனி மூலம் வெளிநாடுகளுக்கு குறிப்பாக துபாய் ,அபுதாபி ,சீனா ,சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் உள்ள டான்ஸ் பார்களில் 20 வயதுள்ள இளம் பெண்களுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக ஊடகத்தில் விளம்பரம் கொடுத்தார் . அதை நம்பி கேரளா ,தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா
 

பசவராஜ் கலசாட் என்ற 37 வயது நபர் சென்னையிலும் ,டெல்லியிலும் ‘மெட்ராஸ் காஸ்டிங் இன்டர்நேஷனல் மாடலிங் ஈவென்ட்ஸ்”என்ற பெயரில் ஒரு கம்பெனி நடத்துகிறார் .இந்த கம்பெனி மூலம் வெளிநாடுகளுக்கு குறிப்பாக துபாய் ,அபுதாபி ,சீனா ,சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் உள்ள டான்ஸ் பார்களில் 20 வயதுள்ள இளம் பெண்களுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சமூக ஊடகத்தில் விளம்பரம் கொடுத்தார் .

அதை நம்பி கேரளா ,தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள பல இளம் பெண்கள் வேலை கேட்டு குவிந்தனர் .பின்னர் அவர்களையெல்லாம் கொரானாவால் ஏற்பட்ட ஊரடங்குக்கு முன்பாக ஜனவரி மாதத்தில் துபாயில் கொண்டு போய் விட்டுள்ளார் .ஆனால் அங்கு போன அந்த பெண்களுக்கு அவர் கூறியபடி டான்ஸ் பாரில் வேலைகொடுக்கவில்லை .

அதற்கு பதிலாக விபச்சார விடுதிகளில் விறக்கப்பட்டனர் என்ற தகவல் அங்கு போனபிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது .இதனால் அதிர்ச்சியுற்ற அந்த பெண்கள் மீண்டும் தாயகம் திரும்ப முற்பட்ட போது கொரானா கொடுமையால் ஊரடங்கு போடப்பட்டு ,விமான சேவைகள் நிறுத்தப்பட்டன .இதனால் அப்பெண்கள் அந்த நாட்டிலேயே தவித்து வருகின்றனர் .

பிறகு அந்த பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களும் இந்திய தூதகரத்தில் தங்களை ஏமாற்றிய பசவராஜ் மீது புகாரளித்தனர் .இந்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்து பசவராஜை கைது செய்துள்ளனர் .மேலும் அவரின் ஆதர் கார்டு ,பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முடக்கியுள்ளனர் .