×

“நேரு, இந்திராவுக்கு பின் மோடி தான் மாஸான தலைவர்” – உலகின் சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில் இடம்பெற்று சாதனை!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இதழ் நிறுவனமான டைம் (TIME) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியல் தயாரித்து வெளியிடும். இதற்காக நிறுவனம் உலகளவில் பிரபலமான பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டும் டைம் இதழ் 100 நபர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தலைவர்கள் பிரிவில் இந்திய பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இதழ் நிறுவனமான டைம் (TIME) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியல் தயாரித்து வெளியிடும். இதற்காக நிறுவனம் உலகளவில் பிரபலமான பலரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும். வாசகர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையில் இறுதியாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்தாண்டும் டைம் இதழ் 100 நபர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தலைவர்கள் பிரிவில் இந்திய பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்பிரிவில் இவர்களைத் தவிர அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளி பெண்ணான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜிங்பிங், தலிபான் தலைவரும் ஆப்கானிஸ்தான் இடைக்கால துணை பிரதமருமான முல்லா பரதார் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல முன்மாதிரி பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் சிஇஓ அதார் பூனவல்லாவும் 100 பேர்களில் ஒருவராவார்.

டைம் இதழில் மோடி குறித்து எழுதியுள்ள கட்டுரையில், “சுதந்திர இந்தியாவில் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்குப் பின் மாபெரும் செல்வாக்கு பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்கிறார். ஆனால் இந்தியாவை மதச்சார்பின்மையிலிருந்து விலக வைத்து இந்து தேசியம் பக்கம் நெருங்க வைத்துள்ளார். மிக முக்கியமாக இந்திய இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறித்துள்ளதுடன், பத்திரிகையாளர்கள் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்து கருத்துரிமையைப் பறித்துள்ளார்” என்று விமர்சனம் செய்துள்ளது.

அதேபோல மம்தா பானர்ஜி குறித்து எழுதியுள்ள கட்டுரையில், “இந்திய அரசியலில் கோபத்தின் முகமாக மம்தா பானர்ஜி மாறியுள்ளார். திருணாமுல் கட்சியை அவர் தலைமையேற்று நடத்தவில்லை. அவர் தான் கட்சியாகவே உள்ளார். தெருவில் இறங்கி போராடும் போர்க்குணமும், ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்த காரணமும் அவரை செல்வாக்குமிக்க நபராக மாற்றியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.