×

விமான நிலையத்தை அதானிக்கு வழங்கும் முடிவை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்த பினராயி விஜயன்!

கேரள சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு வழங்குவதை கண்டித்து தீர்மானம் ஒன்றை பினராயி விஜயன் கொண்டு வந்துள்ளார். தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி இன்று கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய
 

கேரள சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு வழங்குவதை கண்டித்து தீர்மானம் ஒன்றை பினராயி விஜயன் கொண்டு வந்துள்ளார்.


தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் அலுவலகத்துக்கு தொடர்பு உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி இன்று கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.


இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி நிறுவனத்துக்கு வழங்குவதை எதிர்த்தும், அந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு வழங்குவதை பா.ஜ.க தவிர்த்து மற்ற கேரள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, இந்த தீர்மானம் ஒரு மனதாக சட்டமன்றத்தில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.