காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு!
காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காஷ்மீர் அருகே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில இடங்களில் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது. பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. உயிரிழப்புகள் ஏதும் இல்லையென இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.