×

காதலனோடு சென்ற பெண் -தொடர்ந்து வந்த வாலிபர்கள் -காதலன் முன்பு நடந்த கொடுமை .

காதலனுடன் கடற்கரைக்கு சென்ற பெண்ணை மூன்று வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர செய்துள்ளது . ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரம் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் 21 வயதான பெண்,அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார் .இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பெண் தனது ஆண் நண்பருடன் கோமராகிரிபட்னம் கடதரி அருகேயுள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தார் .அப்போது அந்த கடற்கரைக்கு மூன்று வாலிபர்கள் வந்தனர் .அப்போது அவர்கள் அந்த பெண்ணும்
 


காதலனுடன் கடற்கரைக்கு சென்ற பெண்ணை மூன்று வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பலரை அதிர செய்துள்ளது .


ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அல்லவரம் காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் 21 வயதான பெண்,அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார் .இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பெண் தனது ஆண் நண்பருடன் கோமராகிரிபட்னம் கடதரி அருகேயுள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தார் .
அப்போது அந்த கடற்கரைக்கு மூன்று வாலிபர்கள் வந்தனர் .அப்போது அவர்கள் அந்த பெண்ணும் ஆணும் தனியாக இருப்பதை பார்த்தனர் .உடனே அவர்கள் அந்த ஆணை அடித்து உதைத்து ஒரு மரத்தில் கட்டி வைத்தனர் .பின்னர் அவரின் எதிரிலேயே அந்த பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர் .அதன் பின்னர் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து ,இந்த விஷயத்தினை போலீசில் சொன்னால் இதை சமூக ஊடகத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள் .அதன் பிறகு அந்த பெண் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தினை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர்கள் மீது புகார் கூறினர் .அந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிந்தார்கள் .பின்னர் அந்த குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள் .