தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, கடந்த சில நாட்களாக வெப்பம் ஓரளவு குறைவாக இருக்கிறது. அதே போல தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கேரளாவில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
Jun 24, 2020, 18:31 IST
தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி, கடந்த சில நாட்களாக வெப்பம் ஓரளவு குறைவாக இருக்கிறது. அதே போல தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கேரளாவில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்னாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஜூன் 26 அன்றும், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு 27ம் தேதியன்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.