×

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: மேலும் இணைக்கப்பட்ட 4 மாநிலங்கள் இவைதாம்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ரேஷன் முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு முக்கியமான அம்சம் ஒரே நாடு ஒரே ரேஷன். இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றன. வளமான விநியோக கட்டமைப்புக் கொண்ட தமிழ்நாட்டு முறையில் இது பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைக்கின்றன. ஆயினும் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்முறை படுத்துவதில் அதிக
 

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ரேஷன் முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு முக்கியமான அம்சம் ஒரே நாடு ஒரே ரேஷன்.

இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றன. வளமான விநியோக கட்டமைப்புக் கொண்ட தமிழ்நாட்டு முறையில் இது பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைக்கின்றன. ஆயினும் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்முறை படுத்துவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றே தமிழக அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.

கொரோனா பேரிடர் காலத்திலும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மாநிலங்களைச் சேர்க்கும் பணியில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மும்முரமாக உள்ளது. அதன் அடிப்படையில் இன்று சில மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மத்திய நுகர்வோர் உறவுகள், உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சர்  ராம் விலாஸ் பஸ்வான் ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து மற்றும் உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இணைவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தயார்நிலையை கருத்தில் எடுத்துக் கொண்டு, ஏற்கனவே இருக்கின்ற 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களோடு இந்த 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தேசிய அளவிலான செயல்பாட்டுக்கு ஒருங்கிணைத்துள்ளது. இவற்றோடு சேர்த்தால் இப்பொழுது ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் கீழ் 1 ஆகஸ்ட் 2020 முதல் 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன.

ஆந்திரப்பிரதேசம், பீகார், தாத்ரா &  நகர் ஹவேலி மற்றும் டாமன் &  டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு&காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகியன இணைந்துள்ள 24 மாநிலங்கள்  / யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

இவற்றோடு சேர்க்க மொத்த என்ஃஎஃப்.எஸ்.ஏ மக்கள் தொகையில் சுமார் 65 கோடி பேர் (80%) நாடு முழுவதற்கும் செல்லுபடியாகக் கூடிய ரேஷன் அட்டைகள் மூலம் இந்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் எங்கிருந்தாலும் உணவுப்பொருள்களை இப்பொழுது பெற்றுக் கொள்ள முடியும்.  மீதி உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை தேசிய அளவில் செல்லுபடியாகும் நடைமுறையில் மார்ச் 2020-21க்குள் ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை என்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) என்பது ஒருவர் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாது ரேஷன் அட்டைகளின் நாடு முழுவதும் செல்லுபடியாகும் தன்மையால் உணவுப் பொருள்களை அவர் பெற முடியும்.  மத்திய அரசின் திட்டமான ”பொது விநியோக அமைப்புக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை (IM-PDS)” என்ற திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நியாய விலைக் கடைகளில் நிறுவப்பட்டுள்ள பயோமெட்ரிக் அல்லது ஆதார் அடிப்படையில் இயங்கும் விற்பனை புவியிட மின்னணு கருவியைப் பயன்படுத்தி இந்த வசதியானது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.