×

‘200க்கும் மேற்பட்டவர்களுக்கு’ தனது நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய முதியவர் கைது!

கர்நாடக மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள சல்லகேரி பகுதியில் வசிக்கும் மக்கள் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, தங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து நிர்வாண புகைப்படங்கள் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நிர்வாண புகைப்படங்கள் அனுப்பிய நபர் ராமகிருஷ்ணா(54) என்ற முதியவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மொபைல்
 

கர்நாடக மாநிலத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள சல்லகேரி பகுதியில் வசிக்கும் மக்கள் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு, தங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து நிர்வாண புகைப்படங்கள் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நிர்வாண புகைப்படங்கள் அனுப்பிய நபர் ராமகிருஷ்ணா(54) என்ற முதியவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மொபைல் எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சிறிது நேரம் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார், கடந்த வெள்ளிக்கிழமை அவரை கைது செய்துள்ளனர்.

அந்த முதியவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏதோ ஒரு எண்ணை தான் டயல் செய்வேன் என்றும் அந்த எண்ணில் அழைப்பு சென்றால் அதற்கு புகைப்படங்கள் அனுப்புவேன் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.