×

அக்.2: மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க உத்தரவு

நாளை 02.10.2020 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும்மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், நாளைய தினம்; ‘மது விற்பனை இல்லாத நாளாக” அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 02.10.2020 அன்றைய தினம் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 211 அரசு மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மதுபான உரிமதலங்கள் மற்றும் மதுபான உரிமத்தலங்கள்
 

நாளை 02.10.2020 காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும்
மதுபான விடுதிகள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் எனவும், நாளைய தினம்; ‘மது விற்பனை இல்லாத நாளாக” அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 02.10.2020 அன்றைய தினம் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 211 அரசு மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மதுபான உரிமதலங்கள் மற்றும் மதுபான உரிமத்தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.