×

கணவரை விட்டு ஓடிப்போன பெண் -இடையூறாக இருந்த மகள் -அடுத்து மகளுக்கு என்னாச்சி தெரியுமா ?

கணவரை விட்டு ஓடிய பிறகு ,குழந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்ணையும் அவரின் காதலரையும் போலீசார் கைது செய்தனர் . ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது சுமித் அஹிர் அவரின் மனைவி டீனா மற்றும் அவர்களது நாலு வயதான மகளோடு வசித்துவந்தார் .இந்நிலையில் அந்த டீனா, ஒரு ராங் கால் மூலம் பிரஹ்லாத் சஹாய் என்ற வாலிபர் விரித்த வலையில் விழுந்தார் . அதனால் அந்த டீனா அவரின் நாலு வயதான
 

கணவரை விட்டு ஓடிய பிறகு ,குழந்தையை காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண்ணையும் அவரின் காதலரையும் போலீசார் கைது செய்தனர் .

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது சுமித் அஹிர் அவரின் மனைவி டீனா மற்றும் அவர்களது நாலு வயதான மகளோடு வசித்துவந்தார் .இந்நிலையில் அந்த டீனா, ஒரு ராங் கால் மூலம் பிரஹ்லாத் சஹாய் என்ற வாலிபர் விரித்த வலையில் விழுந்தார் .

அதனால் அந்த டீனா அவரின் நாலு வயதான மகளுடன் அந்த காதலனோடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடி விட்டார் .அதனால் அந்த கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தார் .போலீசார்  வழக்கு பதிந்து அவர்களை தேடினர் .அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தில் அந்த பெண்ணையும் அவரின் காதலனையும் கண்டுபிடித்தனர் .அப்போது அவரோடு இருந்த குழந்தையை பற்றி கேட்ட போது அந்த குழந்தை  பாட்டி வீட்டில் இருப்பதாக சொன்னார் .ஆனால் அதை நம்பாத  போலீசார், அந்த பெண்ணை கடுமையான முறையில் விசாரித்தனர் .அப்போது அவர் தனது மகளுக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சை செய்ய முடியாததால் தன்னுடைய காதலனுடன் சேர்ந்து சிறுமியை கொலை செய்து, காட்டில் புதைத்து விட்டதாக  கூறினார் .பின்னர் போலீசார் அந்த டீனாவையும் அவரின் காதலரையும் கைது செய்தனர் .