கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் ! நித்யானந்தாவின் பெண் சீடர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய உத்தரவு !
ஆசிரமத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் ஊரடங்கு காரணமாக அகமதாபாத்தில் தங்குமிடம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தங்களை மீண்டும் கர்நாடகா செல்ல அனுமதிக்கட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து நீதிமன்றங்களை நாடி உள்ளனர்.
சட்டவிரோதமாக குழந்தைகளை அடைத்து வைத்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஹதிஜானில் உள்ள டி.பி.எஸ் (கிழக்கு) வளாகத்தின் ஆசிரமத்தின் நிர்வாகிகள் ஸ்ரீஹரினி மற்றும் ரித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 7 அன்று மிர்சாபூர் கிராம நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விசாரணை நிலுவையில் உள்ளதால் அவர்கள் நீதிமன்ற அனுமதியின்றி அகமதாபாத்தை விட்டு வெளியேறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு, கர்நாடகாவின் பிடாடியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சென்று தங்க அனுமதிக்குமாறு நித்யானந்தாவின் சீடர்கள் இருவரும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகளில் தவறாமல் கலந்துகொள்வதாக அவர்கள் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளனர்.