×

“சானிடைசரை குடிச்சா சரக்கு மாதிரியே கிக்கு ஏறும் “நண்பரின் ஆலோசனையில் சானிடைசரை குடித்த ஒன்பது பேர் மரணம் -பலரின் உயிர் ஊசல் ..

இந்த கொரானா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் சரக்கடிக்க காசில்லாமல் தவித்த பலர், சானிடைசரை குடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது . ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரகாசம் தாலூக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த ஊரடங்கு காரணமாக பல சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன .இதனால் பல குடிகாரர்கள் குடிக்க முடியாமல் திண்டாடினார்கள் .அது மட்டுமல்ல பலருக்கு குடிக்க காசில்லாமல் வறுமையில் வாடினார்கள் . இந்நிலையில் புதன்கிழமையன்று சரக்கு கிடைக்காத விரக்தியிலிருந்த அந்த ஊரை சேர்ந்த
 

இந்த கொரானா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் சரக்கடிக்க காசில்லாமல் தவித்த பலர், சானிடைசரை குடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது .
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரகாசம் தாலூக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த ஊரடங்கு காரணமாக பல சாராயக்கடைகள் மூடப்பட்டுள்ளன .இதனால் பல குடிகாரர்கள் குடிக்க முடியாமல் திண்டாடினார்கள் .அது மட்டுமல்ல பலருக்கு குடிக்க காசில்லாமல் வறுமையில் வாடினார்கள் .


இந்நிலையில் புதன்கிழமையன்று சரக்கு கிடைக்காத விரக்தியிலிருந்த அந்த ஊரை சேர்ந்த 20 பேர் ஒன்று கூடினார்கள் .அப்போது ஒரு நண்பர் சானிடைசரை குடித்தால் அதில் சரக்கு போல போதை வருமென்று ஐடியா கூறினார் .உடனே அங்கிருந்த ஒருவர் கைக்கழுவ வைத்திருந்த சானிடைசரை கொண்டு வந்தார் .அதில் தண்ணீரை கலந்து அனைவரும் குடித்தனர் .அதை குடித்த சிறுது நேரத்திலேயே அனைவரும் மயங்கி விழுந்தனர் .அப்போது அங்கிருந்த சிலர் அனைவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மூன்று பேர் அப்போதே இறந்தார்கள் .மேலும் ஆறு பேர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்கள் .இதில் இறந்த அனைவருமே 35 வயது முதல் 65 வயதாகும் நபர்கள் ஆவார்கள் .,மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள் .
இறந்தவர்களை கூட்டமாக அந்த கிராமத்து மக்கள் சோகமே உருவாக அடக்கம் செய்து வருகின்றனர் .இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்