மனசு மாறிய தேசிய மக்கள் கட்சி… மணிப்பூரில் தப்பியது பா.ஜ.க. அரசு… மீண்டும் ஏமாந்த காங்கிரஸ்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மணிப்பூர் அரசியல் பரபரப்பாக உள்ளது. அன்று இரவு பா.ஜ.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரசுக்கு தாவினர். மேலும் பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்த தேசிய மக்கள் கட்சியின் 4 அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் பா.ஜ.க.வுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் பா.ஜ.க. அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியை இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற மணிப்பூர் ராஜ்யசபா இடத்துக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில் நேற்று திடீர் திருப்பமாக பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என தேசிய மக்கள் கட்சி அறிவித்தது.