×

“புக் படிக்கிறத விட்டுட்டிங்க-புக் ஷாப் ஓனர திருடனா மாத்திட்டிங்க”-புத்தகம் விற்காததால் பைக் திருடனாய் மாறிய புத்தக கடைக்காரர்..

இந்த ஊரடங்கு காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது .இப்படி நவி மும்பை மாலில் புத்தகக் கடை உரிமையாளராக இருந்த ஒருவரையும் இந்த ஊரடங்கு பைக் திருடனாக மாற வழி வகுத்துள்ளது. மும்பையின் ஜுஹு காவ்னில் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் ,அமித் சக்பால் என்ற 35 வயது நபர் கார்கரின் லிட்டில் வேர்ல்ட் மாலில் அமைந்துள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சொந்தமானவர். இப்போதெல்லாம் செல்போன்லேயே எல்லா தகவலும் வந்த பிறகு புத்தகம்
 

இந்த ஊரடங்கு காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது .இப்படி நவி மும்பை மாலில் புத்தகக் கடை உரிமையாளராக இருந்த ஒருவரையும் இந்த ஊரடங்கு பைக் திருடனாக மாற வழி வகுத்துள்ளது.

மும்பையின் ஜுஹு காவ்னில் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிக்கும் ,அமித் சக்பால் என்ற 35 வயது நபர் கார்கரின் லிட்டில் வேர்ல்ட் மாலில் அமைந்துள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சொந்தமானவர்.

இப்போதெல்லாம் செல்போன்லேயே எல்லா தகவலும் வந்த பிறகு புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது ,அதுவும் இந்த ஊரடங்கு காரணமாக சுத்தமாக யாரும் புத்தகம் படிப்பதில்லை ,யாரும் வாங்குவதுமில்லை .இதனால் மிகவும் குடும்பம் நடத்தவே சிரமப்பட்ட அவர் பிழைப்புக்காக பைக் திருடும் தொழிலில் இறங்கினார் .

மும்பையின் ஜூஹூ கவ்கனில் அடிக்கடி பைக் திருடு போவதால் போலீசார் ,திருடும் நபரை பிடிக்க அந்த பகுதியில் சிசிடிவி கேமெரா பதித்தனர் .ஜூலை 14 இரவு, ஒரு நபர் ஒரு பைக்கை திருடிக்கொண்டு போவதை கேமெராவில் பார்த்த போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர் .அவரை பிடித்து விசாரித்தபோது அவர் அந்த பகுதியில் புக் ஷாப் வைத்திருக்கும் அமித் என கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார்கள் .பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது .