×

இந்தியாவின் ஆணழகன் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் (34) கொரோனாவால் தாக்கி உயிரிழந்தார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெகதீஷ், கடந்த 4 நாட்களாக குஜராத் மாநிலம் வடோதரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில், அவர்கள் நலமுடன் உள்ளனர்.
 

இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட் (34) கொரோனாவால் தாக்கி உயிரிழந்தார். கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெகதீஷ், கடந்த 4 நாட்களாக குஜராத் மாநிலம் வடோதரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில், அவர்கள் நலமுடன் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ் லாட், நவி மும்பையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வடோதராவில் குடியேறினார். அங்கு அவர் தனது சொந்த ஜிம்மைத் தொடங்கினார். மிஸ்டர் இந்தியா போட்டியில் ஜகதீஷ் லாட் இரண்டு முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி இவர் உலக சாம்பியன்ஷிப்பில் ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்.