கர்நாடகா: ஒரே குழியில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைத் தூக்கி வீசிய ஊழியர்கள்! – அதிர்ச்சி வீடியோ
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடல்களை ஒரே குழிக்குள் தூக்கி வீசி எறிந்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்ய அம்மாநில முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் மருத்துவமனையிலிருந்து வாகனம் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடல் ஏற்றப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாட மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை குழிக்குள் தூக்கி எறிந்த சம்பவத்தின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில முதல்வர் எடியூரப்பா இது குறித்து கூறுகையில், “பெல்லாரியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்த விதம் மனிதத் தன்மையற்றது, வலியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. மனிதத்தன்மையைத் தாண்டிய மதம் இல்லை என்பதை ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.