×

எம்.பி.ஏ. படிக்க ஆசைப்பட்ட பெண் -லோன் கொடுப்பதாக வந்த நபர் -கடைசியில் நடந்த கொடுமை

ஒரு பெண் பொறியாளர் எம்பிஏ படிக்க கடன் கொடுப்பதாக கூறிய நபரிடம் 1.1 லட்சம் ஏமாந்தார் . மும்பையில் போவாய் நகரில் , ஒரு ஐ .டி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு இளம் பெண் வசித்து வந்தார் .அவர் தன்னுடைய வேலையில் பதவி உயர்வு பெற எம்பிஏ படிக்க ஆசைப்பட்டார் .அவரிடம் அந்த படிப்பை படிக்க தேவையான கட்டணத்தை கட்ட பணமில்லாததால் ,ஏதாவது ஒரு நிதி நிறுவனத்த்தில் கடன் வாங்கி படிக்க ஆசைப்பட்டார் .அதனால் அவர்
 

ஒரு பெண் பொறியாளர் எம்பிஏ படிக்க கடன் கொடுப்பதாக கூறிய நபரிடம் 1.1 லட்சம் ஏமாந்தார் .

மும்பையில் போவாய் நகரில் , ஒரு ஐ .டி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு இளம் பெண் வசித்து வந்தார் .அவர் தன்னுடைய வேலையில் பதவி உயர்வு பெற எம்பிஏ படிக்க ஆசைப்பட்டார் .அவரிடம் அந்த படிப்பை படிக்க தேவையான கட்டணத்தை கட்ட பணமில்லாததால் ,ஏதாவது ஒரு நிதி நிறுவனத்த்தில் கடன் வாங்கி படிக்க ஆசைப்பட்டார் .அதனால் அவர் இணையத்தில் ஏதாவது கடனை கொடுக்கும் நிறுவனம் இருக்கிறதா என்று தேடினார் .அப்போது அவருக்கு ஒரு போன் நம்பர் கிடைத்தது .உடனே அந்த போன் நம்பருக்கு போன் செய்து, தனக்கு படிக்க கடன் வேண்டுமென்ற  விவரத்தை கூறினார் .

உடனே எதிர்முனையில் பேசிய பங்கஜ் சிங் என்ற நபர் அவருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசினார் .அவர்  பேசியதை உண்மையென்று நம்பிய அந்த பெண் பொறியாளர், அவரை நம்பி தன்னுடைய முழு விவரத்தையும் கூறினார் .அடுத்து அந்த நபர் கடன் பெற சர்வீஸ் கட்டணமாக முதலில் 1.1 லட்சம் ரூபாய் கட்டவேண்டுமென்று கூறி அந்த பணத்தை தன்னுடைய அக்கௌன்டிற்கு  அனுப்ப சொன்னார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவர் கேட்ட பணத்தை மார்ச் 25ம் தேதியன்று அவரின் அக்கௌண்டுக்கு அனுப்பி வைத்தார் .அதன் பிறகு அந்த நபரிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை .இந்த பெண் போன் செய்தாலும் அவர் எடுக்கவில்லை .இதனால் தான் நன்றாக  ஏமாற்றப்பட்டதையுணர்ந்த அந்த பெண்  அங்குள்ள சைபர் க்ரைம் போலீசில் அவர் மீது புகார் கொடுத்தார் .பிறகு போலீசார் வழக்கு பதிந்து இந்த  மோசடி செய்த நபரை தேடி வருகிறார்கள் .