×

மாமியார் வீட்டிற்குச் சென்ற மனைவி… அழைத்து வரச் சென்ற கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மனைவி மீது அளவில்லா பாசம் கொண்ட கணவர் ஒருவர் மனைவி இறுதிச்சடங்கில் உடன்கட்டை ஏறச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. திங்கள்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் பங்க்ரம் தலோதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கிஷோர் காதிக் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ருச்சிதா சிட்டாவர் என்ற பெண்ணை மணந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ருச்சிதா, நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் காணச் சென்றிருந்தார். இந்நிலையில், கிஷோர்தனது மனைவியை மீண்டும் அழைத்து வர
 

மனைவி மீது அளவில்லா பாசம் கொண்ட கணவர் ஒருவர் மனைவி இறுதிச்சடங்கில் உடன்கட்டை ஏறச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

திங்கள்கிழமை அன்று, மகாராஷ்டிராவின் பங்க்ரம் தலோதி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கிஷோர் காதிக் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ருச்சிதா சிட்டாவர் என்ற பெண்ணை மணந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு, மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ருச்சிதா, நோய்வாய்ப்பட்ட தனது தாயைக் காணச் சென்றிருந்தார்.

இந்நிலையில், கிஷோர்தனது மனைவியை மீண்டும் அழைத்து வர மாமியார் வீட்டிற்கு வந்தபோது, ​​ருச்சிதா அங்கு இல்லை. பின்னர், அதே நாளில் ஒரு கிணற்றில் இருந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ருச்சிதா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் ருச்சிதாவின் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத கிஷோர் மனைவியை எரித்த தீயில் தானும் உடன்கட்டை ஏற ஓடியுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆனால் கிஷோர் மீண்டும் தப்பி ஓடிவந்து அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கிணற்றுக்குள் கயிற்றை எறிந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அவர் வேண்டுமென்றே கயிறை பிடிக்காமல் தண்ணீருக்குள் மூழ்கினார். போலீசார் இந்த மரணத்தை விபத்தாக பதிவு செய்துள்ளனர்.