×

சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞர்….கைது செய்த போலீஸ்!

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி. 30 வயதான இவருக்கு அதேபகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி லலிதாக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த சிறுமிக்கு சுப்ரியா என்ற 20 வயதான அக்கா உள்ளார். சுப்ரியாவுக்கு வாய் பேச முடியாது என்பதால், தன்னுடன் சேர்த்து தனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி லலிதா கேட்க, அதற்கு மணமகன் உமாபதி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஒரே மேடையில் அக்கா –
 

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி. 30 வயதான இவருக்கு அதேபகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி லலிதாக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த சிறுமிக்கு சுப்ரியா என்ற 20 வயதான அக்கா உள்ளார்.

சுப்ரியாவுக்கு வாய் பேச முடியாது என்பதால், தன்னுடன் சேர்த்து தனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி லலிதா கேட்க, அதற்கு மணமகன் உமாபதி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஒரே மேடையில் அக்கா – தங்கை 2 பேரையும் திருமணம் செய்து உள்ளார்.

இதுகுறித்து இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து முல்பாகல் தாலுகா குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வேகமடுகு கிராமத்திற்கு விரைந்தனர். அத்துடன் மணப்பெண்கள் இருவரின் பிறப்பு சான்றிதழை பார்த்ததில் லலிதாவுக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது முல்பாகல் போலீசில் புகார் அளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், புதுமாப்பிளையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.