மின் கட்டணத்தை அதிரடியாக குறைத்த மத்திய பிரதேச அரசு… முன்பு ரூ.100 செலுத்தி இருந்தால் இனி 50 ரூபாய்தான்
நாடே கொரோனா வைரஸ் நெருக்கடியால் சிக்கி தவிக்கும் வேளையில், மத்திய பிரதேச மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அம்மாநில அரசு மாதந்திர மின் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அம்மாநிலத்தில் உள்ள குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.
மேலும் ரூ.100 முதல் ரூ.400 வரை மின்கட்டணம் செலுத்தியவர்களிடம் ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படும். அதேசமயம் ரூ.400க்கு அதிகமாக மின் கட்டண செலுத்தியவர்கள் பாதி தொகையை செலுத்தினால் போதும். அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 56 லட்சம் மின்சார பயன்பாட்டாளர்கள் ரூ.50 மட்டுமே மின் கட்டணமாக செலுத்துவார்கள் மற்றும் ரூ.255 கோடி வரை பலன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.