×

காப்பகத்தில் 65 வயதில் மலர்ந்த காதல் : 54 வயது மணமகனை திருமணம் செய்துகொண்ட பெண்!

58வயதான ஒருவர் 65 வயதான பெண்மணியை காப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த 58 வயதான ராஜன் . இவர் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாமல் காலத்தை கடத்திவந்த இவர், கொரோனா காலத்தில் வாழ்வாரத்தை இழந்துள்ளார். இதனால் கேரள மாநிலம் அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரை போலவே 65 வயதான மண்ணடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற
 

58வயதான ஒருவர் 65 வயதான பெண்மணியை காப்பகத்தில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த 58 வயதான ராஜன் . இவர் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகாமல் காலத்தை கடத்திவந்த இவர், கொரோனா காலத்தில் வாழ்வாரத்தை இழந்துள்ளார். இதனால் கேரள மாநிலம் அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரை போலவே 65 வயதான மண்ணடி பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்ற வாய்பேச இயலாத பெண் ஒருவரும் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காப்பகத்தில் சந்தித்துக்கொண்ட ராஜனும், சரஸ்வதியும் நட்பாக பழகி வந்த நிலையில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசத்தை கடந்து இருவரும் பரஸ்பரமாக வாழ முடிவெடுத்த நிலையில் இதை காப்பக நிர்வாகிகள் தெரிந்து கொண்டுள்ளனர். இதையடுத்து காப்பக நிர்வாகிகள், காதலர் தினமான பிப் 14 ஆம் தேதியன்று இருவரும் காப்பகத்தில் எளிய முறையில் திருமணம் செய்து வைத்து மணமக்களை வாழ்த்தினர்.