×

கேரளா- அறுவை சிகிச்சையில் சிறுமி உயிரிழப்பு: மணிக்கட்டு நரம்புகளை அறுத்து டாக்டர் தற்கொலை

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏழு வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்களும் அரசியல் பிரமுகர்களின் மிரட்டல் விடுத்ததாலும், குடும்பத்தை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் அனூப் கிருஷ்ணா, கடந்த மாதத்தில் 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த 23ஆம் தேதி சிறுமி திடீரென
 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏழு வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்களும் அரசியல் பிரமுகர்களின் மிரட்டல் விடுத்ததாலும், குடும்பத்தை பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்ததாலும் மன அழுத்தத்தில் இருந்த டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் அனூப் கிருஷ்ணா, கடந்த மாதத்தில் 7 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த 23ஆம் தேதி சிறுமி திடீரென உயிரிழந்ததும், சிறுமியின் உடலுடன் உறவினர்களும், ஊர்க்காரர்களும் மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகாமல், அனு கிருஷ்ணா குறித்தும், அவர் மனைவி அர்ச்சனா பிஜூ
குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள்.
இவற்றினாலும், ஏழு வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தனது மகன் ஏழு வயதில் இருப்பதை நினைத்து நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளான டாக்டர், கை மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிகிச்சையில் உயிரிழந்த சிறுமியால் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.