கேரளா: திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா! பெண்ணின் அப்பா மீது வழக்கு
கேரள மாநிலத்தில் திருமண விழாவில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா பரவல் உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பெண்ணின் அப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கார்கோடு மாவட்டத்தில் செங்காலா என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி விமரிசையாக திருமண விழா நடந்தது. இதில், அரசு கட்டுப்பாடுகளை மீறி ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்றவர்களில் 43 பேருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மணமக்களும் அடங்குவர்.