என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரௌடி விகாஸ் துபேவுக்கு கொரானாவா?-முடிவுக்கு காத்திருப்பு ..
உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டு போலீசாரை சுட்டு கொன்ற கேங்ஸ்டர் விகாஸ் துபேவை நேற்று ஒரு கோவிலில் வைத்து கைது செய்தனர் . போலீஸ் அவரை இன்று அதிகாலை விசாரணைக்கு அழைத்து செல்லும்போது அவர் போலீஸ் வேனிலிருந்து தப்பி செல்ல முயன்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .
இன்று போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட கேங்ஸ்டர் விகாஷ் துபேவின் உடல் கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்,கொரானா டெஸ்ட் எடுத்து முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.கொரானா டெஸ்ட் முடிவு வந்த பிறகுதான் அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் .