சபரிமலை விமானநிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை!
சபரிமலைக்கு விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த கேரள அரசு பிறப்பித்த ஆணைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். நேரடியாக சமரிமலைக்கு வர விமான சேவை இல்லை.
இதைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டத்தில் சபரிமலைக்கு அருகில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.